உள்ளூர் செய்திகள்

ஜேடர்பாளையம் அருகேவிஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2023-06-25 14:13 IST   |   Update On 2023-06-25 14:13:00 IST
  • பொன்னுசாமி (வயது 65) விவசாயி. இவரும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வரு டங்களாக பொன்னுசாமி தனியாக வசித்து வந்தார்.
  • இந்த நிலையில் நேற்று பொன்னுசாமிக்கும் அவரது மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள கண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 65) விவசாயி. இவரும் இவ ரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களாக பொன்னுசாமி தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று பொன்னுசாமிக்கும் அவரது மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள் ளது. இதனால் அவர் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து உயிருக்கு போராடியுள்ளார். இதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த வர்கள் அவரை காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பொன்னு சாமி உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த ஜேடர்பாளையம் போலீசார் பொன்னுசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்த னர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News