உள்ளூர் செய்திகள்

கரை ஒதுங்கிய முருகன் சிலை.

கடற்கரையில் ஒதுங்கிய முருகன் சிலை

Published On 2022-09-14 07:39 GMT   |   Update On 2022-09-14 07:39 GMT
  • வடக்குசல்லிக்குளம் கடற்கரை பகுதியில், சுமார் 1 1/2 அடி உயரமுள்ள சுருங்கல்லால் ஆன முருகன் சிலை ஒன்று கரை ஒதுங்கியது.
  • கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது சிறிது உடைந்திருந்ததால் சிலையை கடலில் விட்டு சென்றர்களா.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா வேட்டைக்காரனிருப்பு, வடக்குசல்லிக்குளம் கடற்கரை பகுதியில், சுமார் 1 1/2 அடி உயரமுள்ள சுருங்கல்லால் ஆன முருகன் சிலை ஒன்று கரை ஒதுங்கியது.

இதை பார்த்த வடக்குசல்லிக்குளத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் கொடுத்த தகவலின் பேரில், வேட்டைக்காரனிருப்பு கிராம உதவியாளர்ரவி, முருகன் சிலையை கைப்பற்றி வேட்டைக்காரனிருப்பு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று வைத்து தாசில்தார் ரவிச்சந்திரனுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இந்த சிலையை யாராவது விட்டு சென்றர்களா? இல்லை கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது சிறிது உடைந்திருந்ததால் சிலையை கடலில் விட்டு சென்றர்களா? என விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News