ஆறுமுகநேரியில் வாலிபர் சங்க கட்டிடம்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
- முன்னதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பூவரசூர் ஆதிபிராமணி பொடிப்பிள்ளையம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
- கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரியில் பூவரசூர் ஐக்கிய வாலிபர் சங்கத்தின் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. பேரூராட்சி துணைத் தலைவர் கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார்.ஊர் தலைவர் சிவசக்திவேல், தி.மு.க நகர செயலாளர் நவநீத பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூவரசூர் சக்திவேல் வரவேற்று பேசினார். விழாவில் தமிழக கால்நடைத்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
தி.மு.க மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், ஆறுமுகநேரி நகர துணை செயலாளர் அகஸ்டின், வார்டு கவுன்சிலர் வெங்கடேசன், முன்னாள் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், செல்வம், சக்திவேல், வெங்கடேசன், தியாகராஜன், மேகவள்ளி, மணி, தூசி முத்து, முத்து பாண்டி, பாலகிருஷ்ணன், ராகவன், கண்ணன், மூக்காண்டி, சாமிகண்ணு, தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பூவரசூர் ஆதிபிராமணி பொடிப்பிள்ளையம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.