உள்ளூர் செய்திகள்

விவசாயியை தாக்கிய வாலிபர் கைது

Published On 2023-03-19 09:17 GMT   |   Update On 2023-03-19 09:17 GMT
  • விவசாயியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து கணேஷ்குமாரை கைது செய்தனர்.

மதுரை

மதுரை நரியம்பட்டியைச் சேர்ந்தவர் சுகுமாறன் (வயது 53), விவசாயி. இதே பகுதியில் கணேஷ்குமார் (31) என்பவரும் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நரியம்பட்டி கோவில் திருவிழா நிகழ்ச்சிக்காக பொதுமக்களிடம் வரி வசூல் செய்யப்பட்டது. அப்போது பணம் விவகாரம் தொடர்பாக சுகுமாறன்- கணேஷ்குமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 2 பேருக்கும் இடையில் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் சுகுமாறன் நரியம்பட்டி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த கணேஷ்குமார் அவரை தடுத்து நிறுத்தி தகராறு செய்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைதொடர்ந்து கணேஷ்குமார் கல்லால் சுகுமாறனை தாக்கினார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

இதுதொடர்பாக சுகுமாறன் விக்கிரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேஷ்குமாரை கைது செய்தனர்.

Tags:    

Similar News