உள்ளூர் செய்திகள்

வல்லடிகாரர் கோவில் திருவிழா தேரோட்டம்

Published On 2023-02-23 14:19 IST   |   Update On 2023-02-23 14:19:00 IST
  • மதுரை அருகே வல்லடிகாரர் கோவில் திருவிழா தேரோட்டம் நடந்தது.
  • வருகிற மார்ச் மாதம் 2-வது வியாழக்கிழமை அன்று மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது.

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது வெள்ளலூர். இதை சுற்றி 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதனை இந்த பகுதி மக்கள் வெள்ளலூர் நாடு என்று அழைப்பார்கள். வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டியில் வல்லடிகாரர் சுவாமி கோவில் உள்ளது.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய முறைப்படி பழமை மாறாமல் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திருவிழாவிற்காக வெள்ளலூர் கோவில் முன்பு கிராம அம்பலக்காரர்கள், இளங்கச்சிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி கடந்த 17-ந் தேதி நாள் குறித்தனர்.

அதன்படி வருகிற மார்ச் மாதம் 2-வது வியாழக்கிழமை அன்று மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது. 3-ந்தேதி(வெள்ளிக்கிழமை) கோவில் திருவிழாவும், 4-ந்தேதி (சனிக்கிழமை) தேரோட்டமும், 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருவிழாவிற்காக நாள் குறித்த தினத்தில் இருந்து 15 நாட்கள் விரதம் தொடங்கினர்.

குறிப்பாக சமையலுக்கு தாளிப்பது, மாமிசம் சமைப்பது, மரம் வெட்டுவது, கட்டுமானப் பணிகள் மேற்கொள்வது உட்பட எதனையும் செய்யாமல் கடும் விரதம் இருக்கின்றனர். இந்த திருவிழா பழமை மாறாமல் நடைபெறுவது இதன் சிறப்பம்சமாகும்.

Tags:    

Similar News