உள்ளூர் செய்திகள்

ரேஷன் அரிசி கடத்தியவா் குண்டா் சட்டத்தில் கைது

Published On 2022-07-02 07:25 GMT   |   Update On 2022-07-02 07:25 GMT
  • ரேஷன் அரிசி கடத்தியவா் குண்டா் சட்டத்தில் கைதானார்.
  • மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்து உள்ளாா்.

மதுரை

மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த சோலை மகன் முத்து என்ற கொரில்லா முத்து (வயது 45). இவா் மீது 40 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கடத்தியதாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் கொரில்லா முத்து மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடுவதாக தகவல் வந்தது. எனவே அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகா் உத்தரவிட்டாா். இதன் அடிப்படையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார், கொரில்லா முத்துவை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, மதுரை மத்தியச் சிறையில் அடைத்து உள்ளனர்.

மதுரை மண்டலத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படு வதாக வரும் புகாா்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் அரிசி மூட்டைகளை கிட்டங்களில் பதுக்கி வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்து உள்ளாா்.

Tags:    

Similar News