உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

Published On 2023-05-07 14:28 IST   |   Update On 2023-05-07 14:28:00 IST
  • மதுரை மேற்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.
  • கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

மதுரை

மதரை திருப்பரங்குன்றம் நகர்ப்புற சுகாதார நிலையம் அருகில் தியாகராசர் பொறியியல் கல்லூரி செல்லும் வழியில் உள்ள உள்ள மதுரை மாநக ராட்சியின் மேற்கு மண்டல அலுவலகத்தில் நாளை மறுநாள் (9-ந்தேதி) காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

மேயர் இந்திராணி தலைமை தாங்குகிறார். இந்த மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு பகுதிகளான மாடக்குளம், முத்துராமலிங்கபுரம், முத்துப்பட்டி அழகப்பன் நகர் மெயின் ரோடு, பழங்காநத்தம், கோவலன் நகர், டி.வி.எஸ்.நகர் மெயின் ரோடு, தென்னகரம், ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு, வீரகாளியம்மன் கோவில் தெரு, ஜெய்ஹிந்துபுரம், சோலையழகுபுரம், எம்.கே.புரம், வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, மீனாட்சி நகர் அவனியாபுரம், பாம்பன் சுவாமி நகர், பசுமலை, திருநகர், சவுபாக்யாநகர், ஹார்விப்பட்டி, திருப்பரங்குன்றம் சன்னதி தெரு, திருப்பரங்குன்றம் பாலாஜி நகர், அவனியாபுரம் அருப்புக்கோட்டை மெயின் ரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம்.

மேற்கண்ட தகவல் மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Tags:    

Similar News