உள்ளூர் செய்திகள்
- லாரி மோதி முதியவர் பலியானார்.
- மதுரை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய விருதுநகர் மாவட்டம் என்.ஜி.ஓ. காலனி தாமரை தெருவை சேர்ந்த லாரி டிரைவர் ராமர் (43) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை விசாலாட்சிபுரம், காலங்கரையைச் சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 60). இவர் நேற்று கே.கே நகருக்கு சைக்கிளில் சென்றபோது நடுரோட்டில் நிலை தடு மாறி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி பாண்டியராஜ் மீது மோதியது. இதில் உடல் நசுங்கிய பாண்டியராஜ் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார்.
அவரை அக்கம் பக்கத்தி னர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் டாக்டர்களின் சிகிச்சை பலனின்றி, பாண்டியராஜ் பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக மதுரை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய விருதுநகர் மாவட்டம் என்.ஜி.ஓ. காலனி தாமரை தெருவை சேர்ந்த லாரி டிரைவர் ராமர் (43) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.