தமிழ்நாடு செய்திகள்
டெல்லியில் மோசமான வானிலை - சென்னையில் 11 விமான சேவை ரத்து
- வட மாநிலங்களில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக நேற்று 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.
- விமான சேவை ரத்தானதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
டெல்லி மற்றும் வட மாநிலங்களில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக நேற்று 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. 131 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வட மாநிலங்களில் பனி மூட்டத்துடன் மோசமான வானிலை நிலவுவதால் சென்னை விமான நிலையத்தில் நேற்று 19 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் நாடு முழுவதும் நிலவிய மோசமான வானிலை காரணமாக இன்றும் விமான சேவை பாதிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் 11 விமானங்களில் சேவை ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து புறப்படும் 4 விமான சேவை, 7 வருகை விமான சேவை ரத்து செய்யப்பட்டன.
கொல்கத்தா, ஜெய்ப்பூர், காசியாபாத் நகரங்களுக்கான புறப்பாடு, வருகை விமான சேவை ரத்தானதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.