உள்ளூர் செய்திகள்
- சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
- இதனை தொடர்ந்து மாணவ-மாணவிகள் பங்கேற்ற பட்டிமன்றம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி சத்திரிய நாடார் உயர்நிலைபள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு யோகாசனம் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்ற பட்டிமன்றம் நடந்தது.
ஹோமியோபதி மருத்துவர் அமுதா மூச்சுப்பயிற்சி மற்றும் பல்வேறு யோகாசனங்களை கற்றுக் கொடுத்தார்.
இதனை தொடர்ந்து மாணவ-மாணவிகள் பங்கேற்ற பட்டிமன்றம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.