முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
ஏலச்சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் பணம் மோசடி
- ஏலச்சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்தனர்.
- பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரை சேர்ந்தவர் சேதுபாண்டி. அரசுபோக்குவரத்துக்கழக ஊழியர். இவரது மனைவி போதுமணி(வயது40). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ஏராளமானோர் மாதந்தோறும் ஏலச்சீட்டு பணம் செலுத்தி வந்தனர்.
உறவினர் அன்னதானம், சகோதரர் ஆறுமுகம் ஆகியோர் பொதுமக்களிடம் சீட்டுபணத்தை வசூலிப்பது வழக்கம்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு போதுமணி லட்சக்க ணக்கில் சீட்டு பணத்துடன் தலைமறைவாகி விட்டார். இதனால் ஏலச்சீட்டு செலுத்தி வந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பாக போதுமணியின் கணவர் சேதுபாண்டியிடம் கேட்டபோது சீட்டு பணம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார். இதையடுத்து பணத்தை இழந்தவர்கள் போதுமணி, அவரது கணவர் மற்றும் சகோரர் ஆறுமுகம், உறவினர் அன்னதானம் ஆகியோர் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்திடம் புகார் கொடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி யடைந்த சீட்டு போட்டு ஏமாந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.