உள்ளூர் செய்திகள்

வாலிபரை மிரட்டி 'ஜிபே' மூலம் ரூ.10 ஆயிரம் பறிப்பு

Published On 2023-03-16 09:37 GMT   |   Update On 2023-03-16 09:37 GMT
  • வாலிபரை மிரட்டி ‘ஜிபே’ மூலம் ரூ.10 ஆயிரம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • நாகமலை புதுக்கோட்டையைச்சேர்ந்த விமல் (24), பார்த்திபன் (21), யோகேஸ்வரன் (18) ஆகிய 3 பேர் சிக்கினர்.

மதுரை

ஊட்டியை சேர்ந்தவர் முகமது தானிஷ் (வயது 28). இவர் மதுரை பாண்டி கோவில் ரோட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் முகமது தானிஷ் சக நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் மதுரை நாகமலை புதுக்கோட்டை கீழக்குயில் குடியில் உள்ள ஒரு மலை கோவிலுக்கு சென்றார்.

அங்கு அவர் தோழிகளு டன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் முகமது தானிசிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த லேப்டாப் மற்றும் செல்போன்களை பறித்துக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து ரூ.10 ஆயிரம் தர வேண்டும். இல்லையென்றால் இந்த பெண்களை கத்தியால் குத்தி கொன்று விடுவோம் என்று மிரட்டினர். இதனால் பயந்துபோன முகமது தானிஷ் மற்றும் அவரது நண்பர்கள் 'ஜிபே' மூலம் ரூ.10 ஆயிரத்தை அனுப்பி னர். அதனை பெற்றுக் கொண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

இது தொடர்பாக முகமது தானிஷ் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பணம் பறித்த நாகமலை புதுக்கோட்டை யைச்சேர்ந்த விமல் (24), பார்த்திபன் (21), யோகேஸ்வரன் (18) ஆகிய 3 பேர் சிக்கினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News