உள்ளூர் செய்திகள்
பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம்
- பரவையில் பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் நடந்தது.
- சமயநல்லூர் அருகே உள்ள அதலையில் ராமலிங்க சுவாமிகள் கோவில் திருவிழா 2 நாட்கள் நடக்கிறது.
வாடிப்பட்டி
சமயநல்லூர் அருகே உள்ள அதலையில் ராமலிங்க சுவாமிகள் கோவில் திருவிழா 2 நாட்கள் நடக்கிறது. திருவிழாவை காண்பதற்காக பக்தர்கள் பரவை வழியாக சென்று வருகின்றனர். அவர்கள் பயன்பெறும் வகையில் பரவை பேரூராட்சியில் ராமலிங்க சுவாமிகள் அறப்பணி பேரவையின் 65-வது ஆண்டு விழா நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
இதை பேரூராட்சி சேர்மன் கலா மீனாராஜா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜா அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.