தமிழ்நாடு செய்திகள்

டிட்வா புயலால் எதிர்பார்த்த மழை பெய்யாதது ஏன்? - தனியார் வானிலை ஆய்வாளர் விளக்கம்

Published On 2025-11-30 11:53 IST   |   Update On 2025-11-30 11:53:00 IST
  • இலங்கை நிலப்பரப்பின் ஊடுருவலில் இருக்கும்போது அதன் தாக்கத்தால் நமக்கு மழை கொடுக்கக்கூடிய வகையில் அமையவில்லை.
  • வானிலை காரணிகள் மாறியதால் டிட்வா புயலால் கரைப்பகுதியில் மழை மேகங்களை உருவாக்க முடியவில்லை.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 180 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தற்போது புயலின் வேகம் அதிகரித்து 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. டிட்வா புயல் வேதாரண்யத்தில் இருந்து 140 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரைகளுக்கு இணையாக நகர வாய்ப்பு உள்ளது. பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் முறையே 60 கி.மீ. மற்றும் 30 கி.மீ. தூரத்தில் மையம் கொள்ளும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.

இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக எதிர்பார்த்த மழை பெய்யாதது ஏன்? என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* டிட்வா புயல் இலங்கை நிலப்பரப்பின் ஊடுருவலில் இருக்கும்போது அதன் தாக்கத்தால் நமக்கு மழை கொடுக்கக்கூடிய வகையில் அமையவில்லை.

* இலங்கையில் இருந்து வெளியே கடல் பகுதிக்கு வந்த பிறகு வானிலை காரணிகள் மாறியதால் டிட்வா புயலால் கரைப்பகுதியில் மழை மேகங்களை உருவாக்க முடியவில்லை.

* வறண்ட காற்றின் ஊடுருவல் மற்றும் காற்று முறிவே மழை குறைந்ததற்கு காரணம்.

* தற்போதைய நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை படிப்படியாக குறையும். இருந்த போதிலும் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News