உள்ளூர் செய்திகள்

திருமங்கலத்தில் காங்கிரசார் போராட்டம்

Published On 2023-03-27 08:06 GMT   |   Update On 2023-03-27 08:06 GMT
  • திருமங்கலத்தில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
  • ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்புக்கு கண்டனம் தெரிவித்து இந்த போராட்டம் நடந்தது.

திருமங்கலம்

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்புக்கு கண்டனம் தெரிவித்து திருமங்கலம் காந்தி சிலை முன்பு தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம் நடத்தினர். நகரத் தலைவர் சவுந்தரபாண்டி, அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, சுப்பிரமணி, மகேந்திரன், ராஜ்குமார், லகநாதன், மகளிரணி மாவட்ட தலைவி பிரவீனா, ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் சரவண பகவான், வக்கீல் பிரிவு ராஜா, பிரசாந்த், கவுன்சிலர் அமுதா சரவணன், முருகேசன், தளபதி சேகர், பாண்டியன், சங்கன், வெஸ்டர்ன் முருகன், புதுராஜா, காசிநாதன், கணேசன், பாண்டீசுவரன், வேல்முருகன், பழனிக்குமார், தாழைக் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News