உள்ளூர் செய்திகள்

மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Published On 2023-06-27 08:45 GMT   |   Update On 2023-06-27 08:45 GMT
  • அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி மாநகராட்சி மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
  • கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தார்.

மதுரை

மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட் பட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மேயர் இந்திராணி தலைமை யில் நடைபெற்றது. அப் போது மதுரை மாநகராட்சி மண்டலம் 2-க்கு உட்பட்ட விளாங் குடி 20-வது வார்டு பகுதி களுக்குட்பட்ட 116 தெரு பகுதிகளில் அடிப் படை வசதிகளை நிறை வேற்றக் கோரி பல முறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.

மேலும் இப்பகுதியில் சாக்கடை, கழிவு நீர் பிரச் சினை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருவதால் பொது மக்கள் அவதிப்படுகின்றனர். இதனை சரி செய்யாத மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டித்து கவுன்சிலர் நாக ஜோதி சித்தன் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட பொது மக்கள் மண்டல அலு வலகத்தை முற்றுகையிட்டு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பதாகை களை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி மேயர், ஆணையாளரிடம் மனு அளிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த னர். தொடர்ந்து மனு அளிக்க மண்டல அலுவல கத்திற்குள் வந்த பொது மக்கள் மேயர் மற்றும் அதி காரிகள் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் பொது மக்கள் சார்பில் கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தார்.

மனுக்களை பெற்றுக் கொண்ட மேயர், ஆணையா ளர் ஆகியோர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித் தனர். அதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

அதே போல் மானகிரி 33-வது பகுதியில் கடந்த 6 மாதமாக குடிநீர் வராததை கண்டித்தும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆர்ப் பாட்டம் நடத்தினர். இத னால் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News