உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணி

Published On 2023-09-15 07:54 GMT   |   Update On 2023-09-15 07:54 GMT
  • உசிலம்பட்டியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
  • பேரணியில் செவிலிய மாணவர்கள் மற்றும் டி.இ.எல்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் சுற்றி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

உசிலம்பட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு தலைமை மருத்துவமனை மாவட்ட மனநல திட்டத்தின் மூலமாக உலக தற்கொலை தடுப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் டாக்டர் செல்வராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நடராஜன், நிலைய மருத்துவர் டாக்டர் மாதவன், மாவட்ட மனநல மருத்துவர் சந்தோஷ்ராஜ், மனநல உளவியலாளர் அப்துல், சமூகப்பணியாளர் சோனியா, ஜெகன், செவிலியர் பிரசாத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.பேரணியில் செவிலிய மாணவர்கள் மற்றும் டி.இ.எல்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் சுற்றி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

Tags:    

Similar News