- தோட்டத்தில் மாடு மேய்ந்ததில் தகராறில் கணவன்-மனைவி மீது தாக்கப்பட்டது.
- உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிந்து ரஞ்சித்தை கைது செய்தனர்.
மதுரை
மதுரை கே.பெருமாள் பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவரது மனைவி நந்தினி(வயது28). இவர்களுக்கு கல்லூத்தில் தோட்டம் உள்ளது. சம்பவத்தன்று மாலை நந்தினி, ரஞ்சித்குமார் ஆகிய 2 பேரும் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு மாடு தோட்டத்துக்குள் சென்றது.
இது தொடர்பாக நந்தினி மாட்டின் உரிமையாளரை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மாட்டின் உரிமையாளர் உருட்டு கட்டையால் கணவன்- மனைவி இருவரையும் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றுவிட்டார். இதில் படுகாயம் அடைந்த இருவரையும் உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக உத்தப்பநாயக்கனூர் போலீசில் நந்தினி புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூத்து பால்பாண்டி(45) என்பவரை கைது செய்தனர். இது தவிர வரகீஷ் என்ற மாயி, பால்பாண்டி மனைவி பேச்சி, மகள் சுபாஷினி என்ற ஜெயலட்சுமி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இதே வழக்கில் பால்பாண்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிந்து ரஞ்சித்தை கைது செய்தனர். இது தவிர நந்தினியிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.