உள்ளூர் செய்திகள்

வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேர் கைது

Published On 2022-06-06 09:56 GMT   |   Update On 2022-06-06 09:56 GMT
  • வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை

தேனி மாவட்டம், தெற்கு ஜெகநாதபுரம், ஊமைத்துரை தெருவைச் சேர்ந்தவர் சுதர்சன் (வயது 32). இவர் நேற்று காலை ஆத்திகுளத்துக்கு வந்தார். அவரிடம் 6 பேர் கும்பல் கத்திமுனையில் ரூ. ஆயிரத்தை பறித்து சென்றது.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட ஜேம்ஸ்ராஜா, வெற்றிவேல்முருகன், பாக்யராஜ் என்ற ராஜா, மணிகண்டன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய சின்னமுத்து, சின்னத்தம்பி ஆகியோரை தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம், அனுமந்தன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் நிவாஸ் (26). இவர் நேற்று சின்ன சொக்கிகுளம், பழைய அக்ரஹாரம் தெரு அருகே நடந்து சென்றார். அங்கு வந்த 3 பேர் கும்பல், கத்தியை காட்டி மிரட்டி ரூ. 2 ஆயிரத்பதை பறித்துச்சென்றது.

இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பீ.பீ.குளம், நபிகள் நாயகம் தெரு, ஹக்கீம் மகன் அல்-முபின் (22), நரிமேடு தாமஸ் தெரு அய்யனார் மகன் விக்னேஸ்வரன் (22), விஜய் (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். 

Tags:    

Similar News