உள்ளூர் செய்திகள்

மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

மறியலில் ஈடுபட்ட 30 பேர் கைது

Published On 2023-04-22 14:23 IST   |   Update On 2023-04-22 14:23:00 IST
  • மதுரையில் மறியலில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்தனர்.
  • தமிழக அரசின் தொழிற் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப் பட்டது.

மதுரை

மதுரை மாநகர இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழக அரசின் 12 நேர வேலை சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற கோரி பெரியார் பஸ் நிலையம், கட்டபொம்மன் சிலை அருகில் இன்று மறியல் போராட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் பாவேல்சிந்தன், செயலாளர் செல்வா, நிர்வாகிகள் வேல்தேவா, நிருபனா, நவீன், கவுதம், பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது தமிழக அரசின் தொழிற் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப் பட்டது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் அனுமதியின்றி மறியல் போராட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News