உள்ளூர் செய்திகள்
கல்லூரி மாணவியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது
- கல்லூரி மாணவியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரை
மதுரை மிளகரணை சங்கீத் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் பிருந்தா காமேஷ் (வயது 19). இவர் கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. படித்து வருகிறார். கல்லூரி பகுதியில் நடந்து சென்ற போது அவரின் பின்னால் வந்த 2 மர்ம நபர்கள் மாணவி கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
இது குறித்து சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மாணவியிடம் செல்போனை பறித்தது பொம்மிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 19), ராஜ்குமார் வயது (18) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.