உள்ளூர் செய்திகள்

வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி

Published On 2023-10-25 13:54 IST   |   Update On 2023-10-25 13:54:00 IST
  • வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.
  • சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை அருகே தனக்கன்குளம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பிச்சை முத்து (வயது 72). இவர் செக்யூரிட்டி சர்வீஸ் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று திருமங்க லம்-திண்டுக்கல் நான்கு வழி சாலை மொட்டை மலை அருகே நடந்து சென்று கொண்டி ருந்தார்.

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். ஆனால் செல்லும் வழியிலேயே பிச்சைமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது மகள் சுதா நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதிய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை அருகே உள்ள விரகனூர் கோழிமேடு பகுதியை சேர்ந்தவர் ராமர் மகன் கண்ணன் (25). இவர் தன் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சக்குடி-களிமங்கலம் சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கண்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அவருடன் சென்ற நண்பர் முபாரக் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிரிழந்த கண்ணணின் உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து கண்ணணின் தாய் மகாலெட்சுமி சிலைமான் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News