உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களுக்கு மோர் தானம் வழங்கப்பட்ட போது எடுத்த படம்.

கோடை காலத்தை முன்னிட்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மோர் தானம்

Published On 2023-03-31 07:35 GMT   |   Update On 2023-03-31 07:35 GMT
  • கோவில் நிர்வாகம் ஏற்பாடு
  • கோவிலுக்கு தினமும்ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும்வெளிநாட்டு சுற்றுலாபயணிகளும், பக்தர்களும்வந்துஅம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும்ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும்வெளிநாட்டு சுற்றுலாபயணிகளும், பக்தர்களும்வந்துஅம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். பக்தர்களின் தரிசனத்துக்காக இந்த கோவில் நடைதினமும் அதிகாலை4.30 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுகிறது.

அதேபோலமாலை4மணிக்குநடைதிறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்குஅடைக்கப்படுகிறது.தற்போது கோடைகாலம்என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்குசாமி கும்பிட வரும் பக்தர்கள் வெயில் வெப்பத்தினால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

இதனைகருத்தில் கொண்டுகன்னியாகுமரி பகவதிஅம்மன்கோவிலுக்கு சாமிகும்பிட வரும் பக்தர்கள் வெயிலின் தாக்கத்தினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காககோடைகாலம்முடியும்வரை தினமும்பக்தர்களுக்குமோர்தானம்வழங்க தமிழகஅரசின்இந்து சமயஅறநிலைய ஆட்சித்துறை உத்தரவிட்டுஉ ள்ளது.

இதைத்தொடர்ந்துகுமரி மாவட்ட திருக்கோவில்களின்இணைஆணையர்ஞான சேகர்அறிவுரையின்பேரில் கன்னியாகுமரிபகவதி அம்மன் கோவில்மேலாளர் ஆனந்த்ஏற்பாட்டின்பேரில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்குபகல் நேரங்களில்சாமிகும்பிட வரும்பக்தர்களுக்குமோர் தானம்வழங்கப்பட்டுவருகிறது.

இதைத்தொடர்ந்து தினமும்இந்த கோவிலுக்கு சாமிகும்பிடவரும்ஏராளமா ன பக்தர்கள் மோர்வாங்கி அருந்திவிட்டு செல்கி றார்கள்.

இத ற்காகதினமும்10 லிட்டர்மோர்பயன்படுத்தப் பட்டு வருகிறது. ஏப்ரல், மே ஆகிய2மாதகாலங்களும் இந்த மோர்தான ம் தொடர்ந்து வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News