உள்ளூர் செய்திகள்

பூதப்பாண்டி அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்தது ஏன்?

Published On 2022-09-17 07:27 GMT   |   Update On 2022-09-17 07:27 GMT

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலம் அந்தரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகள் சுபிதா கிரேஸ் (வயது21).

    இவர் திடல் பகுதியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரி யில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக சுபிதா கிரேஸ் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் மயங்கிய நிலையில் கிடந்து உள்ளார். அவரை குடும்பத்தினர் மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சை க்காக சுபிதா கிரேஸ் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுபிதா கிரேஸ் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து பூதப்பாண்டி போலீசில் புகார் செய்யப்ப ட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னர். முதல் கட்ட விசாரணை யில் மாணவி சுபிதா கிரேஸ் கல்வி கட்டணம் செலுத்த வில்லை என்று கூறப்படு கிறது.

    இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    சுபிதாகிரேஸ் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிப்பள் ளம் ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது.இதை யடுத்து உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு உள்ளனர்.

    Tags:    

    Similar News