உள்ளூர் செய்திகள்

பார்வதிபுரத்தில் மின்வாரிய அலுவலகத்தில் இரவு வரை நீடித்த போராட்டம்

Published On 2022-09-27 07:56 GMT   |   Update On 2022-09-27 07:56 GMT
  • மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்
  • இரவு 9 மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டது.

நாகர்கோவில்:

மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை யாளர் பொறியாளர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு அய்யம்பெருமாள் தலைமை தாங்கினார். காலை தொடங்கிய போராட்டம் இரவு வரை நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள்.

இதை தொடர்ந்து இரவு 9 மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News