தமிழ்நாடு செய்திகள்

2 மாதத்தில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

Published On 2026-02-20 11:55 IST   |   Update On 2026-02-20 11:55:00 IST
  • எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக கையாண்டிருக்கிறேன்.
  • எனக்கும், ஆளுநருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த முரணும் கிடையாது.

சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* 5 ஆண்டுகள் ஆட்சி குறித்த மனநிறைவோடு நான் உங்கள் முன்னால் நிற்கிறேன்.

* எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக கையாண்டிருக்கிறேன்.

* தமிழகத்தின் சுயமரியாதைக்கு இழுக்கு வந்தால் அதனை எதிர்க்கும் முதல் நபராக நான் இருப்பேன்.

* தமிழகத்தின் 234 தொகுதிகளையும் எனது தொகுதிகளாக பாவித்து பணியாற்றி வருகிறேன்.

* வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற பாகுபாடும் இன்றி பணியாற்றி இருக்கிறேன்.

* அடுத்த 2 மாதத்தில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்.

* எனக்கும், ஆளுநருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த முரணும் கிடையாது.

* தமிழ்நாட்டை இன்னும் வலிமையாக்கும் நம்பிக்கையை பெற்றுள்ளோம். மீண்டும் ஆட்சிக்கு வந்து திட்டங்களை தொடர்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News