தமிழ்நாடு செய்திகள்
2 மாதத்தில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
- எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக கையாண்டிருக்கிறேன்.
- எனக்கும், ஆளுநருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த முரணும் கிடையாது.
சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* 5 ஆண்டுகள் ஆட்சி குறித்த மனநிறைவோடு நான் உங்கள் முன்னால் நிற்கிறேன்.
* எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக கையாண்டிருக்கிறேன்.
* தமிழகத்தின் சுயமரியாதைக்கு இழுக்கு வந்தால் அதனை எதிர்க்கும் முதல் நபராக நான் இருப்பேன்.
* தமிழகத்தின் 234 தொகுதிகளையும் எனது தொகுதிகளாக பாவித்து பணியாற்றி வருகிறேன்.
* வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற பாகுபாடும் இன்றி பணியாற்றி இருக்கிறேன்.
* அடுத்த 2 மாதத்தில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்.
* எனக்கும், ஆளுநருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த முரணும் கிடையாது.
* தமிழ்நாட்டை இன்னும் வலிமையாக்கும் நம்பிக்கையை பெற்றுள்ளோம். மீண்டும் ஆட்சிக்கு வந்து திட்டங்களை தொடர்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.