உள்ளூர் செய்திகள்

புதுப்பெண் தற்கொலை வழக்கில் கைதான கணவர் ஜெயிலில் அடைப்பு

Published On 2022-09-20 07:13 GMT   |   Update On 2022-09-20 07:13 GMT
  • மாமியார் உள்பட 2 பேர் மீது வழக்கு
  • பூதப்பாண்டி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் அருகு விளையைச் சேர்ந்தவர் அபிராமி (வயது 22).

இவருக்கும் பூதப்பாண்டி ஞாலம்காலனியை சேர்ந்த மனோஜ் (24) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமண நடந்தது.அபிராமி இரண்டு மாதம் கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் அபிராமி தனது அறையில் மின்விசிறி யில் தூக்கு போட்டு தற் கொலை செய்து கொண் டார். இது குறித்து அபிரா மியின் தந்தை வினு பூதப் பாண்டி போலீசில் புகார் செய்தார்.

புகாரில் தனது மகள் சாவிற்கு அவரது கணவர் மற்றும் தாயார் நாகேஸ்வரி பாட்டி கிருஷ்ணம்மாள் ஆகியோர் காரணம் என்று கூறியிருந்தார். மேலும் அபிராமி பேசிய ஆடியோக்களும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதையடுத்து ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் தொடர்ந்து மனோஜ் அவரது தாயார் நாகேஸ்வரி பாட்டி கிருஷ்ணம்மாள் ஆகியோர் மீது பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் மனோஜை போலீ சார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மனோஜ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டார்.

பின்னர் அவரை நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர். நாகேஸ்வரி, கிருஷ்ணம்மாள் ஆகிய இருவரையும் கைது செய்ய பூதப்பாண்டி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News