தமிழ்நாடு செய்திகள்

அரசு ஊழியர்களுடன் வரும் 22-ந்தேதி அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

Published On 2025-12-19 09:25 IST   |   Update On 2025-12-19 09:25:00 IST
  • அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பொதுப்பணி, நிதி மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
  • அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் வரும் டிசம்பர் 22-ந்தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வரும் 22-ந்தேதி அன்று காலை 10.00 மணிக்கு சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் உள்ள ஆலோசனைக் கூடத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

Tags:    

Similar News