உள்ளூர் செய்திகள்

திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசும் பணி

Published On 2022-06-26 12:25 IST   |   Update On 2022-06-26 12:25:00 IST
  • சுற்றுலா வளர்ச்சி கழக இயக்குனர் ஆய்வு
  • கடந்த 2000 ம் ஆண்டின் முதல் நாளன்று திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்து உள்ள சுவாமி விவேகா னந்தர் நினைவு மண்ட பத்தின் அருகில் உள்ள கடல்பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு உள்ளது.

இந்தசிலை கடந்த 2000 ம் ஆண்டின் முதல்நாளன்று திறக்கப்பட்டது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி இந்த சிலையை திறந்து வைத்தார். நான்குபக்கமும் கடல்சூழ்ந்துள்ள திருவள்ளுவர் சிலை உப்புகாற்றால் பாதிப்படைகிறது.

மேலும் சிலைஅமைந்துள்ள மண்டபம், யானைசிற்பம், சிலையின் உட்பகுதி சுவரில் வடிவமைக்கப்பட்ட திருக்குறள் போன்றவை சேதமடையாமல் இருக்க 4ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயன கலவை பூசபடுவது வழக்கம்.

கடந்த 2017- ம்ஆண்டு ரசாயன கலவை பூசப்பட்டது. 4ஆண்டுகள் கடந்த நிலையில் சிலையை பராமரிக்கும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ரசாயன கலவை பூசுவதற்கு சுமார் 85 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து கடந்த 6 -ந்தேதி பராமரிப்பு பணிகள் தொடங்கியது.இந்த பணிகள் நடப்பதால் சுமார் 6 மாதத்திற்கு சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையைபடகில்சென்று பார்வையிட தடை விதிக்கப்பட்டுஉள்ளது.

இந்த நிலையில் ரசாயன கலவை பூசுவதற்காக சிலையை சுற்றிலும் நான்கு பக்கமும் இரும்பினாலான சாரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி திருவள்ளுவர் சிலையில் ஆய்வு செய்து பணியினை நிர்ணையிக்கப்பட்டுள்ள காலத்திற்குள் முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

இந்த ஆய்வின் போது சுற்றுலா வளர்ச்சி கழகமண்டல மேலாளர் டேவிட்பிரபாகர், சுற்றுலா அதிகாரி சீதாராமன், ஓட்டல் தமிழ்நாடு மேலாளர் யுவராஜ், பொறியாளர் ஸ்ரீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News