உள்ளூர் செய்திகள்

சுடலைமாடன் குடும்பத்தினருக்கு கனிமொழி எம்.பி. ஆறுதல் கூறிய காட்சி.

உடன்குடியில் தற்கொலை செய்த தூய்மை பணியாளர் குடும்பத்தினருக்கு கனிமொழி எம்.பி. நேரில் ஆறுதல்

Published On 2023-04-02 09:09 GMT   |   Update On 2023-04-02 09:09 GMT
  • மார்ச் 23-ந் தேதி அதிகாலை சிகிச்சை பலன்றி சுடலைமாடன் பரிதாபமாக இறந்தார்.
  • உமாவிற்கு சாத்தான்குளம் பேரூராட்சியில் இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணை வழங்கப்பட்டது.

உடன்குடி:

உடன்குடி பேரூராட்சியில் புதுக்காலனியை சேர்ந்தவர் சுடலைமாடன் (வயது 56). தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார்.

இவரை முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆயிஷா கல்லாசி, நிர்வாக அதிகாரி பாபு ஆகியோர் சாதியை சொல்லி திட்டியதாக கடந்த மார்ச் 17-ந் தேதி விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டார். ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். கடந்த மார்ச் 23-ந் தேதி அதிகாலை சிகிச்சை பலன்றி பரிதாபமாக இறந்தார்.

பேரூராட்சி அலுவலகம் முன்பு சுடலைமாடன் உறவினர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் திரண்டு சம்பந்தப்பட்ட நபர்களை உடனே கைது செய்யப்பட வேண்டும். அப்போதுதான் உடலை பெற்றுக் கொள்வோம் என தெரிவித்தனர். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் அதிகாரிகள் இறந்த சுடலை மாடன் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் மகள் உமாவிற்கு சாத்தான்குளம் பேரூராட்சியில் இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணை வழங்கப்பட்டது. மேலும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி முதல் கட்டமாக ரூ. 6 லட்சம் நிவாரணம் வழங்கினர். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என உறுதி கூறினர். இதனால் 24-ந் தேதி உடலை பெற்றுக் கொண்டனர். பின்பு அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், சுடலைமாடனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி தனது சொந்த நிதியாக ரூ. 2 லட்சம் வழங்கினார். இந்நிலையில் நேற்று தூத்துக்குடி எம்.பி., கனிமொழி புதுக்காலனியில் உள்ள சுடலைமாடன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பேருராட்சியின் சுடலைமாடன் பணி பதிவேட்டின் படி விடுப்பு இருப்பு கணக்கில் ஈட்டிய 240 நாட்கள் மற்றும் சொந்த காரணங்களுக்கான பணி ஈட்டிய 90 நாட்கள் என கணக்கீடு செய்யப்பட்டு அரசு சார்பில் ரூ. 5 லட்சத்திற்கான காசோலை மற்றும் ஆதிதிராவிட நலம் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி வன்கொடுமை யால் இறந்த சுடலைமாடன் வாரிசான மனைவி தங்கம்மாளுக்கு மாதாந்திர ஒய்வூதியம் ரூ. 5 ஆயிரம் வழங்கும் ஆணையும் வழங்கினார்.

அப்போது சுடலைமாடன் குடும்பத்தினர் எம்.பி.யிடம், சம்பந்தப்பட்ட நபர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. எனவே அவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்பதற்காக எந்த சலுகையும் அளிக்கப்படாது. அவர்களை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். கைது செய்யப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.

இதில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட சேர்மன் பிரம்ம சக்தி, திருச்செந்தூர் ஆர்.டி.ஒ., புகாரி, உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், துணைச் சேர்மன் மீராசிராசுதீன், யூனியன் ஆனணயாளர்கள் ஜாண்சிராணி, பழனிச்சாமி, உடன்குடி பேரூராட்சிதுணைத் தலைவர் மால் ராஜேஷ், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் இளங்கோ, உடன்குடி கவுன்சிலர்கள் ஜாண்பாஸ்கர், அன்புராணி, மும்தாஜ்பேகம், ஆபித் மற்றும் சீராசுதீன், முகமது சலீம், மணப்பாடு ஜெயபிரகாஷ், ரவிராஜா மகாவிஷ்ணு, மகளிர் அணி ஜெசி பொன் ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News