உள்ளூர் செய்திகள்

காவேரிப்பட்டணத்தில் 19-ந் தேதி மின்சாரம் நிறுத்தம்

Published On 2022-07-17 14:44 IST   |   Update On 2022-07-17 14:44:00 IST
  • 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
  • நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெண்ணேஸ்வரமடம் துணை மின் நிலையத்தில் வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

எனவே காவேரிப்பட்டணம் நகரம், தளிஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுளூர், சந்தாபுரம், நரிமேடு, எர்ரஅள்ளி, போத்தபுரம், பையூர், தேவர்முக்குளம், பெரியண்ணன்கொட்டாய், தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல், ஜெகதாப், வீட்டு வசதி வாரியம், பாளையம், மில்மேடு, இந்திரா நகர், குண்டலப்பட்டி, கத்தேரி, கருக்கன்சாவடி, மேல்மக்கான், தாளாமடுவு, பனகமுட்லு, தளியூர், மோரனஅள்ளி, தொட்டிப்பள்ளம், சாப்பர்த்தி, கொத்தளம், குண்டாங்காடு, போடரஅள்ளி அதை சுற்றி உள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News