உள்ளூர் செய்திகள்
கடலூரில் அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர் மீது சரமாரி தாக்குதல்
- மோட்டார் சைக்கிளில் ஒரு பெண் உட்பட 3 ேபர் வந்து திடீரென்று அரசு பஸ்சை வழிமறித்தனர்.
- மோகன் குமார் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
கடலூர்:
அரசு பஸ்சை வழிமறித்து டிரைவரை தாக்கிய 3 பேரை ேபாலீசார் தேடி வருகிறார்கள். கடலூர் அடுத்த மேல் பூவாணிக்குப்பத்தை சேர்ந்தவர் மோகன் குமார் (வயது 40). அரசு பஸ் டிரைவர். சம்பவத்தன்று கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி அரசுபஸ்சில் பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்று கொண்டிருந்தார். இந்த பஸ்சில் கண்டக்டராக ராமலிங்கம் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் ஒரு பெண் உட்பட 3 ேபர் வந்து திடீரென்று அரசு பஸ்சை வழிமறித்தனர்.
பின்னர் பஸ் டிரைவர் மோகன் குமாரை சரமாரியாக தாக்கினார்கள். இதில் காயம் அடைந்த மோகன் குமார் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அடையாளம் தெரியாத 3 ேபர் யார்? என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.