உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் கொட்டி தீர்த்த கனமழை

Published On 2022-08-31 09:33 GMT   |   Update On 2022-08-31 09:33 GMT
  • சோலூர்மட்டம் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் மாலை வரை லேசான மழை பெய்தது.
  • அனைத்து பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

அரவேணு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கொடநாடு, கீழ்கோத்தகிரி, சோலூர்மட்டம் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் மாலை வரை லேசான மழை பெய்தது. இரவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.


விடிய, விடிய கொட்டிய மழையால் கரிக்கையூர், சோலூர்மட்டம், கீழ் கோத்தகிரி கோடநாடு கைகாட்டி கட்டபெட்டு அரவோனு குஞ்சம் பானை மூள்ளூர் மசக்கல் கூக்கல்தெரை என அனைத்து பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

Tags:    

Similar News