உள்ளூர் செய்திகள்

சேரம்பாடி அரசு பள்ளியில் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு முகாம்

Published On 2023-09-08 15:06 IST   |   Update On 2023-09-08 15:06:00 IST
  • நொறுக்கு தீனியை தவிர்க்க மாணவர்களுக்கு அறிவுரை
  • காய்கறி, பழம், கீரை சாப்பிடுவதால் ஊட்டசத்து கிடைக்கும் என ஆலோசனை

ஊட்டி,

பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு நடுநிலை பள்ளியில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி நிர்வாகம், குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் மாணவர்களுக்கு தரமான உணவு மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தலைமை ஆசிரியர் ரஞ்சித்குமாரி, தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசினார். அப்போது அவர், மாணவர்கள் ஆரோக்கியமான உணவுகளான காய்கறிகள், பழங்கள், கீரைகள்ஆகியவற்ைற அதிகம் எடுத்து கொள்வதன் மூலம் உடலில் ஊட்டசத்து கிடைக்கும். நொறுக்கு தீனி போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்தனர். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News