கழிவு நீர்களால் நிலத்தடி நீர் மாசடைந்து விவசாயம் பாதிக்கப்படுகிறது- விவசாயிகள் குற்றச்சாட்டு
- கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது.
- ஏராளமான விவசாயிகள் அவர்களது கோரிக்கை சம்பந்தமான மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
கோவை,
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிசாமி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டம் பொ ள்ளாச்சி, கருமத்தம்பட்டி, மேட்டுப்பாளையம், சூலூர், பெரியநாய க்கன்பாளையம், சிறுமுகை, காரமடை, அன்னூர், ஆகிய பகுதிகளை சார்ந்து இருக்கும் நீர் நிலைகளான குளம், குட்டை, ஏரி, பள்ளம், ஆறு ஆகிய பகுதிகளில் கழிவுநீர் கலந்து நீர் மாசடைந்து வருகிறது.
ஆகையால் நீர்நிலை சார்ந்த தொழிற்சாலை கழிவுநீர்களும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற கழிவுநீர்களும் சில இடங்களில் கலந்து நீரின் தன்மை கெட்டு நிலத்தடி நீர் மாசடைந்து விவசாயமும் பொதுமக்களும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் கிராமப்புற சாலைகளில் வீட்டு கழிவுகளை கொட்டப்படுவதால் பொது சாலை விவசாயத்திற்கு இடையூறாக இருந்து வருவதாலும், சுற்றுச்சூழல் மாசுபட்டு மக்களுக்கு நோய்கள் பரவும் நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
மேலும் இந்த கூட்ட த்தில் கலந்து கொண்ட ஏராளமான விவசாயிகள் அவர்களது கோரிக்கை சம்பந்தமான மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.