- வீட்டில் கட்டி வைத்திருந்த ஆடு ஒன்றை மர்ம நபர்கள் திருடி செல்வதை பக்கத்து வீட்டு பெண் ஒருவர் பார்த்துள்ளார்.
- போலீசார் ஆடு திருடி சென்ற லோடு ஆட்டோவை விரட்டி கங்களாஞ்சேரியில் மடக்கி பிடித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் விற்குடி ஊராட்சி வீரபோகம் மேலத்தெருவை சேர்ந்தவர்(வயது 61) விவசாயி.இவர் தனது வீட்டில் ஆடு வளர்த்து வருகிறார். சம்பவதன்று நள்ளிரவில் ராமலிங்கம் தூங்கி கொண்டிருந்த நேரத்தில் வீட்டில் கட்டி வைத்திருந்த ஆடு ஒன்றை மர்ம நபர்கள் திருடி செல்வதை பக்கத்து வீட்டு பெண் ஒருவர் பார்த்துள்ளார்.அதனை உடனடியாக ராமலிங்கத்திடம் கூறியுள்ளார்.
இது குறித்து ராமலிங்கம் திருக்கண்ணபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீசார் ஆடு திருடி சென்ற லோடு ஆட்டோவை விரட்டி கங்களாஞ்சேரியில் மடக்கி பிடித்தனர்.அப்போது லோடு ஆட்டோவில் இருந்த மர்ம நபர்கள் 3 பேர் தப்பி சென்றனர்.லோடு ஆட்டோவை ஓட்டிவந்த டிரைவர் கீழ்வேளூர் ஒன்றியம் கூத்தூர் வண்ணான்குளம் தெற்கு தெருவை சேர்ந்த மோகன் விஸ்வா (22)என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் விஸ்வா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து ஆடு திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விஸ்வாவை கைது செய்தனர்.மேலும் தப்பிச்சென்ற கூத்தூர் பகுதி சேர்ந்த ராஜேஷ், ஆழியூர் ஸ்ரீநாத் உள்பட பேரை தேடி வருகின்றனர்.