உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் பணம் மோசடி

Published On 2022-09-30 08:34 GMT   |   Update On 2022-09-30 08:34 GMT
  • அமுதா என்பவர் லேடிஸ் பர்ஸ்ட் காவல் உதவி எண்ணை தொடர்பு கொண்டார்.
  • வீரமணி, பணத்தை விரைவில் தருவதாக உறுதியளித்தார். பின்னர் இருதரப்பினரும் எழுதி கொடுத்து சென்றதின் பேரில் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் ஆவினன்குடி பகுதியை சேர்ந்த அமுதா (45)என்பவர் லேடிஸ் பர்ஸ்ட் காவல் உதவி எண்ணை தொடர்பு கொண்டு தனது மகளுக்கு நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி வீரமணி என்பவர் 55 ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக புகார் அளித்தார். அதன் பேரில் ஆவினன்குடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை செய்தனர். அப்போது வீரமணி, பணத்தை விரைவில் தருவதாக உறுதியளித்தார். பின்னர் இருதரப்பினரும் எழுதி கொடுத்து சென்றதின் பேரில் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது.

Tags:    

Similar News