உள்ளூர் செய்திகள்
கத்தி முனையில் செயின், பணம் பறித்த பிரபல ரவுடி கைது
- நேற்று காலை சண்முகா நகர் ஜங்ஷன் அருகே நடந்த சென்று கொண்டிருந்தபோது, இவரை சண்முகா நகர் ராஜகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி வழிமறித்தார்.
- பின்னர் கத்தி முனையில், சீனிவாசனிடம் இருந்து 2 1/4 பவுன் தங்கச் செயின் மற்றும் ரூ.4,300 பறித்து கொண்டார்.
சேலம்:
சேலம் லைன்மேடு வடக்கு காடு பென்ஷன் லைன் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 54). இவர் நேற்று காலை சண்முகா நகர் ஜங்ஷன் அருகே நடந்த சென்று கொண்டிருந்தபோது, இவரை சண்முகா நகர் ராஜகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி விஜி (வயது 36) என்பவர் வழிமறித்தார்.
பின்னர் கத்தி முனையில், சீனிவாசனிடம் இருந்து 2 1/4 பவுன் தங்கச் செயின் மற்றும் ரூ.4,300 பறித்து கொண்டார். இது குறித்து சீனிவாசன் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சந்திரகலா வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி விஜியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.