உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

Published On 2022-07-11 10:27 GMT   |   Update On 2022-07-11 10:27 GMT
பெருந்துறையில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.

பெருந்துறை:

திருப்பூர் மாவட்டம், முத்தூர், மங்கலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியம் (வயது 50). இவர் பெருந்துறை வண்ணாம்பாறை பகுதியில் தங்கி பெருந்துறையில் உள்ள ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவர் ஈரோடு ரோட்டில் உள்ள ஒரு மளிகை கடைக்கு வந்து பொருட்களை வாங்கி கொண்டு வீட்டி ற்கு செல்வதற்காக ரோட்டோரத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஆரோக்கியம் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆரோக்கியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பெரு ந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வரு கின்றனர்.

Tags:    

Similar News