உள்ளூர் செய்திகள்

கீழ்பவானி வாய்க்காலில் இருந்து ஓடையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது

Published On 2022-12-07 15:34 IST   |   Update On 2022-12-07 15:34:00 IST
  • கீழ்பவானி வாய்க்காலில் இருந்து ஓடை வழியாக பொதுப்பணித்துறையினர் தண்ணீரை திறந்து விட்டுள்ளனர்
  • ஓடையை ஒட்டியுள்ள பகுதிகளில் நெல் பயிர்கள் மற்றும் வாழைகள் தண்ணீரில் மூழ்கியது

சென்னிமலை,

கீழ்பவானி வாய்க்கால் தண்ணீர் செல்லும் கடை மடை பகுதியான திருப்பூர் மாவட்டம், முத்தூர், மங்களப்பட்டி பகுதியில் பலத்த மழை பெய்ததால் அங்கு விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

அங்கு மேலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சென்னிமலை அருகே அய்யம்பாளையத்தில் உள்ள முதலைமடை என்னும் இடத்தில் கீழ்பவானி வாய்க்காலில் இருந்து ஓடை வழியாக பொதுப்பணித்துறையினர் தண்ணீரை திறந்து விட்டுள்ளனர்.

ஓடையில் செல்லும் தண்ணீர் மேட்டூர், கரைப்புதூர், சரளைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 5 தரைப்பாலங்களை மூழ்கடித்தபடி செல்கிறது. இதனால் இந்த வழியே பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

மேலும் ஓடையை ஒட்டியுள்ள பகுதிகளில் நெல் பயிர்கள் மற்றும் வாழைகள் தண்ணீரில் மூழ்கியது.

கடைமடை பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் வடியும் வரை ஓடையில் தண்ணீர் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News