உள்ளூர் செய்திகள்

ரோட்டோர புளிய மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

Published On 2022-07-09 09:26 GMT   |   Update On 2022-07-09 09:26 GMT
  • நிலை தடுமாறி ரோட்டோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது வாலிபர்வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
  • இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

பெருந்துறை:

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் மணி கண்டன் (வயது 27). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இவர் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் பகுதியில் இரும்புகளை வாங்கி இரும்பு உருக்கு ஆலைக்கு அனுப்பும் வேலை செய்து வந்தார். இவர் கள்ளியம்புதூர் பகுதியில் தனியாக தங்கி விஜயமங்கலத்திற்கு வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு பல்லகவுண்ட ம்பாளையம் சென்று விட்டு இரவு கள்ளியம்புதூர் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கள்ளியம்புதூர் அருகே வந்து கொண்டு இருந்த போது திடீரென நிலை தடுமாறி ரோட்டோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது அவர் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக கூறினர். இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News