உள்ளூர் செய்திகள்

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

Published On 2022-06-15 10:05 GMT   |   Update On 2022-06-15 10:05 GMT
  • கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
  • இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு அடுத்துள்ள அவல்பூந்துறை, சோளிபாளையம் புதுக்காலனியை சேர்ந்தவர் மாணிக்கம்.

இவரது மகன் பரமேஸ்வரன்(23). தொழிலாளியான இவர் சமீபகாலமாக குடிபோதைக்கு அடிமையானார். சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார்.

வீட்டில் பெற்றோர் வெளியே சென்றிருந்ததால் தனியாக இருந்த பரமேஸ்வரன் நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்காததால் சந்கேகமடைந்த பக்கத்தில் வசிக்கும் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News