தமிழ்நாடு செய்திகள்

அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் தி.மு.க. முதற்றே உலகு - விஜய் கிண்டல்

Published On 2026-02-02 12:21 IST   |   Update On 2026-02-02 12:49:00 IST
  • தமிழக வெற்றிக்கழகத்தின் வளர்ச்சிக்கு தலைமை தொண்டனாக எனது வாழ்த்துகள்.
  • மக்களின் ஒரே பிரதிநிதியாக இருப்பது தமிழக வெற்றிக்கழகம் மட்டும் தான்.

தமிழக வெற்றிக்கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. அப்போது த.வெ.க. தலைவர் கூறியதாவது:

* தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் மிகப்பெரிய கட்சியாக வளர்ந்திருப்பதற்கு காரணம் தொண்டர்கள் தான்.

* தமிழக வெற்றிக்கழகத்தின் வளர்ச்சிக்கு தலைமை தொண்டனாக எனது வாழ்த்துகள்.

* 1977 ஜூன் மாதம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ரேடியோவில் பேட்டி ஒன்று கொடுத்தார். அதில், பேரறிஞர் அண்ணா இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமர்கின்ற நிலை ஏற்பட்டதை நினைத்து கண்ணீர் வடித்தேன். அந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த கட்சிதான் அ.தி.மு.க. என்று கூறினார்.

* 2017-க்கு பிறகு, 2021-க்கு பிறகு தமிழ்நாட்டு நிலையை யோசித்த தமிழக மக்கள் காமராஜர் இருந்த இடத்தில், அண்ணா இருந்த இடத்தில், எம்.ஜி.ஆர். இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமரும் நிலை ஏற்பட்டதை நினைத்து கண்ணீர் வடித்தனர்.

* இன்றைக்கு இந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த கட்சி தான் தமிழக வெற்றிக்கழகம்.

* 1977-ம் ஆண்டு போல பழைய நஞ்சு போன தீஞ்சு போன ஆயுதத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள்.

* பவளவிழா பாப்பாவிற்கு என்ன தெரியும் பழைய டப்பாவை தான் உருட்ட தெரியும்.

* அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் தி.மு.க. முதற்றே உலகு.

* மக்களின் ஒரே பிரதிநிதியாக இருப்பது தமிழக வெற்றிக்கழகம் மட்டும் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News