உள்ளூர் செய்திகள்

தனியார் பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-08-10 15:02 IST   |   Update On 2022-08-10 15:02:00 IST
  • மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனவேதனை அடைந்த குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
  • தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் குமார் உடல் பிரேத பரிசோதனை முடிந்து இன்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

ஈரோடு:

ஈரோடு செங்கோடம்பாளையம் ராஜீவ்நகரை சேர்ந்தவர் குமார் (வயது 39). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இரவு கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

அதன்பிறகு குமார் தனது அறைக்கு தூங்க சென்று விட்டார். காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்து அவரது குடும்பத்தினர் கதவை தட்டி உள்ளனர். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. இதனையடுத்து குடும்பத்தினர் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனவேதனை அடைந்த குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் குமார் உடல் பிரேத பரிசோதனை முடிந்து இன்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

Tags:    

Similar News