உள்ளூர் செய்திகள்

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-04-16 14:49 IST   |   Update On 2023-04-16 14:49:00 IST
  • பேனில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
  • சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோட்டு வீராம்பாளையத்தை சேர்ந்த பிரபு (26). பெங்களூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் கோவையை சேர்ந்த ஆறுமுகம் மகள் லோக சவுமியா (29) என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

சவுமியா கடந்த சில தினங்களாக மனவேதனையில் இருந்தவர் வீட்டில் பேனில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து லோக சவுமியாவின் குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்கள் லோக சவுமியாவை பரிசோதித்து விட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags:    

Similar News