ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை
- நந்தகோபால் சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
- இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பெருந்துறை:
பெருந்துறை ஈரோடு ரோடு வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் வீரன். இவரது மகன் நந்தகோபால் (வயது 21). ஆட்டோ டிரைவர். கடந்த 6 மாதமாக நந்தகோபால் சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி தான் செத்து போவேன் என்று கூறி தூக்குமாட்டிக்கொள்வதாக மிரட்டியுள்ளார்.
இதனை கண்ட அவரது தந்தை ஆறுதல் கூறி சமாதானப்படுத்தி உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 8 மணி அளவில் நந்தகோபால் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். பின்னர் வீரன் அவரை சமாதானப்படுத்தி விட்டு ஆட்டோவை வாடகைக்கு எடுத்து சென்றுள்ளார். இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது நந்தகோபால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதனை பார்த்த அவர் உடனடியாக நந்தகோபாலை கீழே இறக்கி ஆட்டோவில் ஏற்றி பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் நந்தகோபால் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.