உள்ளூர் செய்திகள்

நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே பிரியாணி கடையில் ரூ.2 லட்சம் திருடிய ஊழியர் கைது

Published On 2023-07-11 14:35 IST   |   Update On 2023-07-11 14:35:00 IST
  • ஓட்டல் கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.80 லட்சம் திருட்டுப் போனது குறித்து போலீசில் புகார் செய்யபபட்டது.
  • பணத்தை திருடியதை ஷாஜி அலி விசாரணையின் போது ஒப்புக்கொண்டார்.

நெல்லை:

நெல்லை புதிய பஸ் நிலையம் எதிரே பிரபல பிரியாணி ஓட்டல் ஒன்று உள்ளது. இதில் ஊழியராக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த ஷாஜி அலி (வயது 25) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று அந்த ஓட்டலில் கல்லாப்பெட்டி யில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.80 லட்சம் திருட்டுப் போனது.

இதுகுறித்து ஓட்டல் நிர்வாகியான திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை யை சேர்ந்த வள்ளி பாரதி ராஜா (27) என்பவர் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார்.

மேலும் அவர் ஷாஜி அலி மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் தெரிவித்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் ஷாஜி அலியிடம் விசாரணை நடத்தினர். அப்போது பணத்தை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.76 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாஜி அலியை கைது செய்தனர்.

Tags:    

Similar News