உள்ளூர் செய்திகள்

தி.மு.க. சார்பில் 23-ந்தேதி கிறிஸ்துமஸ் பெருவிழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது

Published On 2024-12-19 13:28 IST   |   Update On 2024-12-19 13:28:00 IST
  • விழாவில் தி.மு.க. சிறுபான்மை நல உரிமைப் பிரிவுச் செயலாளர் டாக்டர் சுபேர்கான் வரவேற்றுப் பேசுகிறார்.
  • கவிஞர் ஜோ.அருள் பிரகாஷ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

சென்னை:

தி.மு.க. சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா வருகிற 23-ந்தேதி மாலை 4 மணியளவில் பெரம்பூர் டான் போஸ்கோ பள்ளி வளாகத்தில் (பிருந்தா திரையரங்கம் அருகில்) தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

விழாவில் தி.மு.க. சிறுபான்மை நல உரிமைப் பிரிவுச் செயலாளர் டாக்டர் சுபேர்கான் வரவேற்றுப் பேசுகிறார். இவ்விழாவில் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் ஜோ.அருண், ஏ.கிறிஸ்டியன் சாம்ராஜ், (தமிழ் சுவி சேஷ லுத்தரன் திருச்சபை) டாக்டர் கதிரொலிமாணிக் கம் (இ.சி.ஐ. சென்னை பேராயர், இந்திய சுவிசேஷ திருச்சபை) நீதிபதி அக்பர் அலி, (முன்னாள் சென்னை ஐகோர்ட்டு நிதிபதி) பங்கு தந்தை சு.சுவர்ணராஜ் (தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்) த.இனிகோ இருதயராஜ் எம்.எஸ்., (தலைவர், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம்)

பேரருள்பணி எச்.சர்மா நித்தியானந்தம் பொறுப்பு பேராயர் சி.எஸ்.ஐ. சென்னை பேராயம்).

கயிலைப்புனிதர் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் (தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை உயர் நிலைக்குழு உறுப்பினர்), அருட்தந்தை மரிய ஆரோக்கியம் கனகா (ம) தாளாளர், பெரம்பூர் டான் போஸ்கோ பள்ளி)

பிரவின்குமார் டாடியா (உறுப்பினர், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம்) ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறை (ம) சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத் தலைவர் அமைச்சர் பி.கே.சேகர் பாபு நன்றி கூறுகிறார்.

கவிஞர் ஜோ.அருள் பிரகாஷ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

Tags:    

Similar News