தூத்துக்குடியில் பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க துண்டுபிரசுரம் வழங்கல்
- பிரதமர் மோடியின் ஆட்சியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை எடுத்துக் கூறினர்
- சாதனை பட்டியலை நோட்டீஸ் மூலமாக வீடு வீடாக சென்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் சூசை நகர் பகுதியில் மக்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடியின் ஆட்சியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை எடுத்துக் கூறினர்.
மேலும் மத்திய அரசு செயல்படுத்திய சாதனை பட்டியலை நோட்டீஸ் மூலமாக வீடு வீடாக சென்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதேபோல் தூத்துக்குடி துறைமுகம் சுனாமி காலனி, லேபர் காலனி உட்பட சுற்றுவட்டார பகுதிக்கு பகுதிகளுக்கும் சென்று வழங்கினர்.
இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. பொதுச் செயலாளரும் தெற்கு மண்டல பார்வையாளருமான உமரி. சத்தியசீலன்,மாவட்டத் துணைத் தலைவர் தங்கம்,கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சின்ன தங்கம்,மண்டல் தலைவர் மாதவன், துணைத் தலைவர் பொய்சொல்லான், பொதுச் செயலாளர் மகேஷ்,மாநில பட்டியல் அணி செயற்குழு உறுப்பினர் மாசாணம், ஒன்றிய மகளிர் அணி தலைவி செல்வி, லட்சுமி, காளீஸ்வரி மற்றும் ராஜ்குமார் தீபன் முனியசாமி முருகேசன் முத்துகிருஷ்ணன் செல்வம் மிக்கி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.