உள்ளூர் செய்திகள்

பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது.

பேரிடர் மேலாண்மை பயிற்சி

Published On 2022-06-16 13:35 IST   |   Update On 2022-06-16 13:35:00 IST
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் குறுவட்ட பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது.

நாகப்பட்டினம்:

திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் குறுவட்ட பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு போலகம் ஊராட்சி மன்ற தலைவர் பவுஜியாபேகம் அபுசாலி தலைமை தாங்கினார். திருமருகல் வருவாய் ஆய்வாளர் சுந்தர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிங்காரவேலு, ஒன்றிய குழு உறுப்பினர் லதா அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில் திருமருகல் தீயணைப்பு நிலைய அலுவலர் திலக்பாபு மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் செந்தில், ஊராட்சி செயலாளர் சாமிநாதன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் எரவா ஞ்சேரி ஊராட்சி துறையூ ரில் ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிதேவி பாலத ண்டாயுதம் தலைமையிலும், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் முன்னிலையிலும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

Tags:    

Similar News